தூத்துக்குடி, மே 26-தூத்துக்குடி மாவட்ட சிதம்பரனார் கட்டுமான தொழிலாளர் சங் கத்தின் மாவட்ட ஆண்டு பேரவை ஞாயிறன்று நடைபெற்றது . சிதம்பரனார் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். மாவட்டபொருளாளர் காசி வரவேற்புரையாற்றினார். அகில இந்திய துணைத்தலைவர் சிங்காரவேலு சிறப்புரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் சுப மாரியப்பன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரசல் நன்றியுரையாற்றினார்.கட்டுமானத்திற்கு தேவையான சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்களின் விலைஉயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,நலவாரியத்தை முறையாக செயல் படுத்த வேண்டும், 55 வயது ஆனபெண் தொழிலாளிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும், அனைவருக்கும் பென்சன் 6 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம் முருகன் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெய்வேந்திரன், ஸ்டான்லி, மாரியப்பன், அந்தோணி, முருகன் கிருஷ்ண பாண்டி, முருகன், இசக்கியம்மாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.