இன்று முதல் சபரிமலை சிறப்பு ரயில் இயக்கம் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
சேலம், நவ.17- விசாகப்பட்டிணம் - கொல்லம் இடையே சேலம், ஈரோடு, போத்தனூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. கேரளம் மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா தொடங்கிய நிலையில், நாடு முழு வதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணத் தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் செல்ல வசதியாக ரயில்வே நிர்வாகம் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆந்திரா மாநிலம், விசாகப் பட்டிணத்தில் இருந்து கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக 3 மாத காலத் திற்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதன்படி, விசாகப்பட்டிணம் - கொல்லம் சிறப்பு ரயில் (08539) செவ்வாயன்று (இன்று) முதல் ஜன.20 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. விசாகப்பட்டிணத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு சாமல்கோர்ட், ராஜ முந்திரி, விஜயவாடா, நெல்லூர், ரேணிகுண்டா, காட் பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலத்திற்கு அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு வந்து, ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணா குளம் டவுன், கோட்டயம், திருவல்லா, செங்கானூர், காயங்குளம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லம் - விசாகப்பட்டிணம் சிறப்பு ரயில் (08540) புதனன்று (நாளை) முதல் ஜன வரி 21 ஆம் தேதி வரை புதன்கிழமை தோறும் (10 சேவை) இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, எர்ணாகுளம் டவுன், பாலக் காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியே சேலத் திற்கு அடுத்தநாள் அதிகாலை 4.05 மணிக்கு வந்து, காட் பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாக விசாகப் பட்டிணத்திற்கு இரவு 11 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நடந்து வரு கிறது.