tamilnadu

img

இந்தி திணிப்பிற்கு பரிசுத் தொகையா? - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை,ஜூன் 17- இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்ககூடிய அறிவிப்பிற்கு சு.வெங்கடெசம் எம்.பி கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம், வங்கியியல் , நிதி குறித்த மூல நூல்களை இந்தி மொழியில் எழுதுவதற்கான திட்டத்தினை தலா 1.25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையோடு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
இந்தி திணிப்பிற்கு பரிசு தொகை அறிவிக்கும் ரிசர்வ் வங்கியின் செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டுமென கோருகிறேன். என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளார்.