தூத்துக்குடி, ஜூன் 17- சொந்த சகோதரியிடமே கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநாகராட்சி அதிமுக கவுன்சிலரான ராஜா என்பவர் தனது சொந்த தங்கையிடமே ரூ.17 கோடி மோசடி செய்ததாக அவரது சகோதரி சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரின் அடிப்படையில் லுகவுட் நோட்டீஸ் விடப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டிற்குத் தப்பி செல்லவிருந்த ராஜாவை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.