tamilnadu

img

‘சித்தன்னவாசல் கோடை விழா - 2025’ முன்னேற்பாடுகள் கலந்தாய்வுக் கூட்டம்

‘சித்தன்னவாசல் கோடை விழா - 2025’ முன்னேற்பாடுகள் கலந்தாய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜுன் 17-  சித்தன்னவாசல் கோடை விழா - 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அரசு உயர் அலுவலர்களுடனான முன்னேற்பாடு கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் திங்கட்கிழமை புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தில் ஜுன் 26, 27 ஆகிய 2 நாட்கள் கோடை விழா நடத்தப்பட உள்ளது. இதில், மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், கண்காட்சி அரங்குகள் அமைத்தல், பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், நிகழ்ச்சியினை பாதுகாப்பான முறையில் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.