tamilnadu

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

திருவாரூர், ஜுன் 17-  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், கொல்லுமாங்குடி கடைவீதியில் பிரச்சார கிளர்ச்சி இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றிட கோரியும், நன்னிலம் ஒன்றியத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை காலை துவங்கிய மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார். பேரளம் நகரச்செயலாளர் ஜி.செல்வம் முன்னிலை வைத்தார்.  சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று, கொல்லுமாங்குடி கடை வீதியில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கொல்லுமாங்குடி கடைவீதியில் உள்ள வர்த்தகர்களிடம் துண்டறிக்கை வழங்கினார். கொல்லாபுரம், பேரளம், பூந்தோட்டம், முடிகொண்டான், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பத்து மையங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று, நன்னிலம் கடைவீதியில் நிறைவு பெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, டி. வீரபாண்டியன் கோரிக்கைகளை விளக்கி மக்களிடம் பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெ.முகமது உதுமான், கே. தமிழ்ச்செல்வி  மற்றும் ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  திருவாரூர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியக் குழுவின் சார்பில், கோட்டூர் கடைவீதியில் நடந்த மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. தமிழ்மணி, கே.பி.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தராஜ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கீரமங்கலத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆ.குமாரவேல் தலைமை வகித்தார். பிரச்சாரத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கவிவர்மன் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி. ஜெயபாலன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பாண்டிச்செல்வி,  கவிஞர் இரா.தனிக்கொடி, சிஐடியு நிர்வாகி எம்.ஏ.ரகுமான், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.மணிவண்ணன், பி.எஸ்.மதியழகன், டி.ராஜா, சி.துரை, என்.தமிழரசன், ஆர்.ஜீவா, ஆர்.ஜி. பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு ஊர்களில் நடைபெற்ற பிரச்சாரம் மாலையில் கொத்தமங்கலத்தில் நிறைவடைந்தது.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. விராலிமலை ஒன்றியம் கொடும்பானூரில் நடைபெற்ற பிரச்சாரத்தை தொடங்கி வைத்து கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் என். மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.இருதயம், கே.எம்.சங்கர், எஸ்.ராஜமாணிக்கம், சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர். விராலிமலை ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் மாங்குடி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், ஒன்றியச் செயலாளர் மா.சங்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர். சேகர், கே. கோவிந்தராஜ், அம்சவல்லி மற்றும் மூத்த தோழர் டி. சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  திருச்சிராப்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கரை பகுதிக்குழுவின் குட்செட், பசுமடம் காஜா பேட்டை, கீழகிருஷ்ணன் கோவில் தெரு கிளைகள் சார்பில் செவ்வாய் அன்று மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், பகுதிக்குழு செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மாறன் மற்றும்  ரெட்டமலை வீரபாண்டி, கிளை உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டு முதலியார்சத்திரம், பசுமடம், காஜா பேட்டை, கீழ கிருஷ்ணன் கோவில் தெரு, கீழப்புதூர், துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில், பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.