சிதம்பரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிதம்பரம், ஜூன் 17- சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி மற்றும் மேல்அனுவம்பட்டு கிராம வாய்க்கால்கள், மீதிகுடி கிராமத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகள், தில்லை அம்மன் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டிய பணிகள் குறித்து கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலு வலரும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநருமான மோகன் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் நகருக்கு வெளியே லால்புரம் கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. சிதம்பரம், அண்ணாமலை நகர் பேரூ ராட்சி, குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றி யங்களை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 50 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கட்டிடம் கட்டும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி னர். இந்த ஆய்வில் சிதம்பரம் சார் ஆட்சியர் கிரண்குமார், வட்டாட்சியர் கீதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.