சாலைத் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
கோவை, ஜூன் 17- அன்னூர் பகுதியில் உள்ள சத்தி சாலையில், தாசம் பாளையம் பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பு (பேரி கார்டு) இல்லாததால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளிலிருந்து சத்திய மங்கலம், கர்நாடகா செல்லும் வாகனங்கள் அன்னூர் பகுதியில் உள்ள சத்தி சாலையில் செல்கிறது. இதனால், இப்பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள் ளது. ஆனால், தாசம் பாளையம் பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பு இல்லாததால், உள்ளூர் மக்கள் பிரதான சாலையிலிருந்து உட்புற சாலைகளுக்கு திரும்ப முய லும்போது விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த ஒரே இடத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு விபத்து கள் நடந்தது. முதலில், இரு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டன. தொடர்ந்து, ஒரு ஆட்டோவும் மற் றொரு இருசக்கர வாகனமும் மோதிய விபத்து நிகழ்ந் தது. இந்த விபத்துகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிவேகமாக வரும் வாகனங்கள் உள்ளூர் மக்க ளுக்கு வழிவிடாததால், அவர்கள் அவசரமாக சாலை யைக் கடக்க முயலும்போது இவ்விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். “தாசம் பாளையம் பிரிவு பகுதியில் பேரிகார்டு தடுப்புகள் அமைத்தால், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்து களை தவிர்க்கலாம்,” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் காவல்துறையி னர் ஆய்வு செய்து, சாலைத் தடுப்பு அமைப்பது உள் ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், மேலும், விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
போக்சோவில் இளைஞர் கைது
தருமபுரி, ஜூன் 17- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதி யிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம், சின்னாகவுண்ட னூரை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (24) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 9 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம், சூர்யா ஆசைவார்த்தைக்கூறி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று 5 நாட்கள் தங்கியுள்ளார். இதனிடையே, பள்ளிக்கு சென்ற மகள் வீடு திரும்பா ததால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்த னர். இதனிடையே, பெற்றோர் தேடுவதை அறிந்த மாணவி, செவ்வாயன்று காலை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்தவை குறித்து தெரி வித்தார். இதைத்தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததால், போலீசார் போக்சோ சட்டத்தில் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும், மாணவியை தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
கோவை, ஜூன் 17- கோவையில் மின்சார வாரிய அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தது பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பிரபு (36) என்பவர் சாப்ட்வேர் இன்ஜினிய ராக பணியாற்றி வருகிறார். இவரது தந் தைக்கு சொந்தமாக கோவை மாவட்டம், நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்நிலத்தின் நடுவே குறைந்த மின் அழுத்த (LT) மின்பாதை யில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக குரும்பப்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண் ணப்பம் செய்தனர். மின்கம்பத்தை மாற்றுவ தற்கான செலவு ரூ.50,000யை தாண்டுவ தால், அதற்கு செயற்பொறியாளரின் அனு மதி பெற வேண்டியதாக இருந்தது. எனவே அவர்கள் சோமனூர் மின் வாரிய செயற் பொறியாளர் சபரிராஜனை நேரில் சந்தித் துள்ளனர். அப்போது மின் கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20,000/- லஞ்சமாக கேட்டி ருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செந்தில் பிரபு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை இடம் புகார் கொடுத்திருக்கிறார். இத னைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை அதி காரிகள் சோமனூர் மின் வாரிய அலுவலகத் தில், ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாகப் பெற்ற, சபரி ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.