tamilnadu

img

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

சென்னை, ஜன. 1 - தமிழ்நாடு அரசு ஊழி யர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்க ப்பட்டுள்ளது.  இந்த உத்தர வின்படி, ‘சி’ மற்றும் ‘டி’  பிரிவைச் சார்ந்த பணியா ளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும்  பணியாளர்கள் மற்றும் 2024-2025 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப்  பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்ப டையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய்  1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். “சி” மற்றும் “டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம  பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதிய தாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயன டைவார்கள் என்ற நிலையில், இதற்காக 183 கோடியே 86  லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.