பழைய ஓய்வூதியம் : முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பு
ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் தகவல்
சென்னை, ஜன. 2 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.3) முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜாக்டோ - ஜியோ அமைப் பினர் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு ஊழி யர்கள் - ஆசிரியர்கள் நீண்ட காலமாகப் போராடி வரு கின்றனர். பழைய ஓய்வூதி யத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப் பட்ட குழு, தனது முழு அறிக்கையை தமிழக அர சுக்கு கடந்த வாரம் சமர்ப்பித் தது. ஆனால், இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எந்தத் திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ள தக வலை தமிழக அரசு இது வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோவின் நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 22 அன்று அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வி அடைந்த நிலையில், ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பி னர் அறிவித்தனர். இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ குழுவினருடன், எ.வ. வேலு, தங்கம் தென்ன ரசு ஆகியோர் தலைமை யிலான அமைச்சர்கள் குழு வினர், கடந்த வெள்ளிக் கிழமை தலைமை செயல கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓய்வூதிய விவகாரத்தில், அரசின் நிலைபாடு தொடர்பாக அமைச்சர்கள் எடுத்துரைத் ததாக கூறப்படுகிறது. அந்த நிலைபாட்டை அரசு ஊழி யர்கள் சங்கங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படு கிறது. பேச்சுவார்த்தைக்குப் பின், ஜாக்டோ- ஜியோ நிர்வா கிகள், தலைமை செயலகத் திற்கு வெளியே செய்தியா ளர்களைச் சந்தித்தனர். அப்போது, அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் சனிக்கிழமையன்று முக் கிய அறிவிப்பை வெளியிடு வார் என்று அமைச்சர்கள் தங்களிடம் தெரிவித்ததாக கூறினர். தங்களின் 23 ஆண்டு கால கோரிக்கைக்கு முதல்வர் வெளியிடப் போகும் அறிவிப்பு தீர்வாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்த னர்.
