பழனியில் 1,024 அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி எம்எல்ஏ வழங்கினார்
பழனி, ஜன.29- பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள் மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 501 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி பழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார் கலந்து கொண்டு, மொத்தம் 1,024 மாண வர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பழனி வருவாய் கோட்டாட்சியர், அருள் மிகு பழனியாண்டவர் அரசு கல்லூரிகளின் முதல் வர்கள், பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, துணை தலைவர் கந்தசாமி, நகர கழக செயலாளர் வேலு மணி, ஒன்றிய கழக செயலாளர்கள் சாமிநாதன், சௌந்தர பாண்டி, ராஜசேகர், பேரூர் கழக செயலாளர்கள் காளி முத்து, அபு தாஹிர், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
