அமைச்சர் மகேஸூக்கு வெள்ளி யானை விருது!
சென்னை, நவ. 27 - பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் சமூக வலைத்தளப் பதிவில், “எனக்கு வழிகாட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த விருதின் பெருமை சேரும், அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பாரத சாரண-சாரணிய வைர விழா மற்றும் கலை ஞர் நூற்றாண்டு பெருந்திரள் பேரணியை திருச்சியில் இந்தியாவே வியக்கும்படி நடத்தி காட்டுவதற்கு தமிழ்நாடு சாரணர்கள் செய்த பங்களிப்பின் விளைச்சல் தான் இந்த விருது” என்றும், “இந்த விருதை சாரணர் களின் உழைப்புக்கு அர்ப்பணிக்கிறேன், வெள்ளி யானை விருது தந்துள்ள உற்சாகத் தோடு தமிழக மாணவர்களின் நலனுக்கு மேலும் சிறப்பாக உழைக்க ஊக்கம் பெறுகிறேன்” என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்த விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து பெற்றார்.
