tamilnadu

img

செம்படைத் தளபதி சீத்தாராம் யெச்சூரிக்கு இறுதி மரியாதை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த அஞ்சலி ஊர்வலத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார், மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தில்லி ஏ.கே.ஜி பவனில் வைக்கப்பட்டிருந்த தோழர் சீத்தாரம் யெச்சூரியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, கல்வியாளர்கள், அறிஞர்களும் அஞ்சலி செலுத்தினர். தேசத்தின் தலைசிறந்த வரலாற்று அறிஞர் பேரா.ரொமிலா தாப்பர் நேரில் வந்து தமது உற்ற தோழருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

எப்போதும் தலைசிறந்த கலை இலக்கியவாதியாக திகழ்ந்த தோழர் சீத்தாராம் உடலுக்கு ஜன நாட்டிய மஞ்ச் தோழர்களின் அஞ்சலி

தேசிய அரசியலில் தமக்கு பல அனுபவங்களை கற்றுக் கொடுத்த நெஞ்சம் நிறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இறுதி மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மரியாதை.

ஆம் ஆத்மி தலைவர் கோபால் ராய் அஞ்சலி.

எப்போதும் உடனிருந்து உதவிய சகதோழரின் கண்ணீர்.