districts

img

40 சதவீத போனஸ் கோரிக்கை

திருப்பூர், செப்.18- திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம், பல்லகவுன் டன்பாளையத்தில் இயங்கி வரும் சக்தி ஆட்டோ காம் பொனன்ட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலா ளர்கள், ஊழியர்கள் அனை வருக்கும் இவ்வாண்டிற்கான போனஸாக 40 சதவிகிதம் வழங் கிட சிஐடியு கோரி உள்ளது.  இதுகுறித்து இந்த நிறுவனத்தின் முதுநிலை துணைத்  தலைவர் ஜி.திருநாவுக்கரசிடம், திருப்பூர் மாவட்ட இன்ஜினி யரிங் தொழிலாளர் மற்றும் ஊழியர் சங்கத்தின் செயலாளர்  ஜெ.கந்தசாமி கோரிக்கை மனுவை வழங்கினார். இந்நிகழ் வில் தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்.பழனிசாமி (தலைவர்),  எஸ்.கே.சந்திரமூர்த்தி (பொருளாளர்) நிர்வாக தரப்பில் முது நிலை பொது மேலாளர் (தொழில் உறவு மற்றும் நலம்) கே. ஆர்.ராஜேந்திரன், உதவி பொது மேலாளர் (மனித வளம்)  கே.கே. தமிழரசன், உதவி பொது மேலாளர் (தொழில் உறவு  மற்றும் நலம்) பி.பரமேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.