districts

img

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

கோவை,செப்.19- கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சுள்ளிமேடு பதியில் பகுதியில் 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
  பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 
ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது சுள்ளி மேடு பதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் தணிக்கை செய்தபோது சுமார் 25 கிலோ மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டது இதுதொடர்பாக ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஜான் என்ற நபரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.