கோபி செப்18 விபத்தை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேக தடை மற்றும் ஒளி ரும் எச்சரிக்கை விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விபத் துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல்நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளிலும் கோவை சாலை, அரசூர் சாலை, புளியம்பட்டி சாலை, கோபி சாலை, கெட்டிசெவியூர் சாலை உள்ளிட்ட பகுதிக ளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு வர்ணம் பூசி எச்சரிக்கை சின்னங்களை அமைத்து வரு கின்றனர். மேலும் விபத்து பகுதிகளில் ஒளி ரும் எச்சரிக்கை வில்லைகள் அடங்கிய தடுப் புகள் அமைத்து வாகன ஓட்டிகள் விபத்தை தவிர்க்க நம்பியூர் நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.