பி.எட். தேர்வு மைய ஒதுக்கீட்டில் தமிழக மாணவர்களுக்கு அநீதி! ஒன்றிய பாஜக அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
புதுதில்லி, டிச.6- தேசிய தேர்வு முகமை நடத்தும் கல்வியியல் கல்லூரி மாணவர்களுக் கான Swayam (ஸ்வயம்) தேர்வு மையங்களை, தமிழ்நாட்டு மாணவர் களுக்கு வேறு மாநிலங்களில் ஒதுக் கீடு செய்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித் துள்ளார். வாய்ப்புகளின் வாசலை அடைத்து விட்டு வசந்தத்தைப் பேசுவதாக ஒன் றிய பாஜக அரசு உள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியிருப்ப தாவது: இந்தியா முழுவதும் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேசிய அளவிலான தேர் வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணியாற்ற முடியும் என்கிற நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் அகில இந் திய அளவில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடை பெற்று வருகிறது. இந்நேரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்தும் பி.எட். மாணவர் களுக்கான Swayam (ஸ்வயம்) தேர்வு கள் வரும் டிசம்பர் 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கேரளம், கர்நாடகத்தில் மையங்கள் ஒதுக்கீடு ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள், தேர்வு செய்யாத தேர்வு மையங்க ளான பக்கத்து மாநிலங்களான கர்நாட கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பல நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டின் கல்வியியல் கல்லூரி மாணவர்களால் ஸ்வயம் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல நூற் றுக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வுக்காக அண்டை மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள். குறிப் பாக தஞ்சாவூரில் இருந்து மட்டும் 50 மாணவர்களுக்கு கர்நாடகத்தின் மைசூரு, மங்களூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இது எவ்வ ளவு அராஜகமானது. தேர்வுக்கான தெளிவான மனநிலையையே சிதைக் கும் சதியைப் போன்றது இந்த நடைமுறை. வாய்ப்பைப் பறிக்கும் திட்டமிட்ட சதி! ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை நடத்தும் ஸ்வயம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், கல்வியியல் படித்து வரும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து சான்றிதழ்களை பெற முடியும் என் கிற இக்கட்டான நிலையில் இப்படி யான நிகழ்வுகளை ஒரு போதும் தற்செயலானதாக பார்க்க இயலாது. தொடர்ந்து பல்வேறு ஒன்றிய அர சின் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் என அனைத்திலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு துரோகம் இழைக்கப்படுவது தொடர் கதையாக மாறி வருகிறது. இது தமிழ் நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு களின் மீது நடத்தப்படும் திட்டமிடப் பட்ட தாக்குதலாக தெரிகிறது. அடிப்படை புரிதல் கூடவா இல்லை? வாய்ப்புகளின் வாசலை அடைத்து விட்டு வசந்தத்தைப் பேசும் நிறுவ னங்களாக ஒன்றிய அரசின் அனைத்து நிறுவனங்களும் மாறியுள்ளன. இந்தப் போக்கு மாற்றப்பட வேண்டும். வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவது குறித்த சிரமங்கள் குறித்த அடிப்படையான புரிதல்கள் கூட இல்லாமலா தேர்வு முகமைகள் செயல்படுகின்றன என்ற கேள்வி எழு கிறது. எனவே, வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்க ளுக்கு பதிலாக தமிழ்நாட்டிலேயே அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கிட வேண்டும் என தேசிய தேர்வு முகமையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
