அதிகரிக்கும் காற்று மாசு; அக்கறையற்ற ஒன்றிய அரசு முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
புதுதில்லி, டிச. 4 - தில்லி காற்று மாசுபாட்டை தடுப்பத ற்கு ஒன்றிய பாஜக அரசு உரிய நட வடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், ‘இந்தியா கூட்டணி’ எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் புதுதில்லியில் காற்று மாசுப் பிரச்சனை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளைச் சந்தித்து வரு கின்றனர். 2022 மற்றும் 2024ஆம் ஆண்டு களுக்கு இடையிலான வெறும் மூன்று வருட காலத்தில், தில்லியில் உள்ள 6 முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கடுமையான சுவாச நோய்கள் பதிவாகி யுள்ளன. இந்த புள்ளிவிவரத்தை, ஒன்றிய அரசு தான் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தில்லியில் காற்று மாசுப் பிரச்சனையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு முகக்கவசத்துடன் வந்தனர். தில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி னர். இதுதொடர்பாக சண்டிகர் மக்கள வை எம்.பி. மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸூம் அளித்தார். அத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
