1 முதல் 14 வயது சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி: அமைச்சர்
சென்னை, அக்.26 - தமிழகத்தில் 1 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரி வித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “கடந்த நிதிநிலை அறிக் கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இளம்பெண்களை புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீட்க இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்காத முயற்சியை முதல மைச்சர் எடுத்தார். இந்தியாவில் முதல்முறையாக தமிழ் நாட்டில் 1 முதல் 14 வயதுடைய குழந்தை களுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. புற்றுநோய் தடுப்பூசிக்காக 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான அனுமதி தற்போது வழங்கப்பட்டு உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி திட்டத்திற்கு ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. ஒப்பந்தம் முடிந்த பின்னர் இந்த திட்டம் அமலுக்கு வரும். தனியார் மருத்துவமனைகளில் புற்று நோய் தடுப்பூசி போட 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே புற்றுநோய் தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களும் செலுத்திக் கொள்ளும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. விரைவில் இலவச தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
