tamilnadu

img

மோசமான உணவுமுறை பழக்க வழக்கங்களால்  இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய், உடல் எடை

மோசமான உணவுமுறை பழக்க வழக்கங்களால்  இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய், உடல் எடை

சென்னை,அக்.2-  இந்தியாவில் வேகமாக மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களின் காரணமாக நீரிழிவு மற்றும் உடல் எடை அதி கரிப்பு மக்களிடையே அதிகரித்து காணப்படுவதாக நேச்சர்மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) - இந்திய நீரிழிவு தொடர்பான   ஆய்வில் தெரிய வந்துள்ளது. மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து இந்த ஆய்வு 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் டெல்லி யின் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களைச் சேர்ந்த 1,21,077 பேரிடம் எடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் 5 பேரில் ஒருவரிடம் விரி வான உணவுமுறைத் தரவு, மாநி லங்கள் முழுவதும் இந்தியாவின் உணவுமுறை பழக்க வழக்கங் கள்,  ஊட்டச்சத்து உட்கொள்ளல் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற அபாயம் ஆகியவை குறித்தும் தெரிய வந்துள்ளது. ஆய்வில் தெரிய வந்தது என்ன? இந்திய உணவு முறை பழக்க வழக்கங்கள், மேக்ரோ நியூட்ரியண்ட்ஸ் அதாவது கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது குறித்த விவரம் வருமாறு: கார்போஹைட்ரேட் உட்கொள்ளல் மாநிலங்கள் முழுவதும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகப்பெரிய வேறுபாடு இருந்தபோதிலும், பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் கலோரிகளில் 62 சதவீதம் கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம்  பெறுவது தெரிய வந்திரு க்கிறது. இது உலகிலேயே மிக உயர்ந்த ஒன்றாகும். இதில் பெரும்பாலானவை வெள்ளை அரிசி, அரைக்கப்பட்ட முழு தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆகியவற்றின் மூலம் பெறப் படுவதும் தெரிய வந்திருக்கிறது. கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் வெள்ளை அரிசியை மக்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். அதே போல் வடக்கு மற்றும் மத்திய மாநி லங்களில் கோதுமை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முக்கிய உணவாக தினைகள் மூன்று மாநிலங்களில் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது: கர்னாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா, இதில் முக்கிய வகைகள் விரல் தினை (ராகி), சோளம் (சோளம்) மற்றும் முத்து தினை (பஜ்ரா) ஆகியவை ஆகும். 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கூடுதல் சர்க்கரை எடுத்துக் கொள்வது என்பது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இது தேசிய பரிந்துரைகளை  விட அதிக மாகும்.  உணவில் கொழுப்பு உட்கொள்ளுதல் சராசரி மொத்த கொழுப்பு தேசிய வழிகாட்டுதல்களில் ஆற்றலில் 30 விழுக்காடு என்ற போதிலும், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 4 மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளல் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கான பரிந்து ரைக்கப்பட்ட வரம்பைவிட (ஆற்றலில் 7விழுக்காடு) அதிகமாக உள்ளது. ஒற்றை நிறைவுறா மற்றும் ஒமேகா-3 பல் நிறை வுறா கொழுப்புகளின் நுகர்வு அனைத்து பகுதிகளிலும் குறை வாகவே உள்ளது. புரத உணவுகளை  எடுத்துக் கொள்ளுதல் இந்தியாவில் ஒட்டுமொத்த புரத உட்கொள்ளல் மிகவும் குறை வாக உள்ளது, இது தினசரி கலோரி களில் சராசரியாக 12 விழுக்காடு ஆகும், வடகிழக்கு மாநிலங்களில் சற்று அதிகமாக 14 விழுக்காடு உள்ளது. இந்திய உணவுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான புரதம் தானியங்கள், பருப்பு வகைகள் (9 %E) ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது. பால் மற்றும் இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்வது என்பது நாடு முழுவதும் குறைவாகவே உள்ளது (முறையே 2%E மற்றும் 1%E). அதிக கார்போஹைட்ரேட் உணவுகளால் வளர்சிதை மாற்ற ஆபத்து அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த வெள்ளை அரிசி, அரைத்த முழு தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும்போது அது வளர்சிதை மாற்ற அபாயத்துடன் நீரிழிவு, நீரிழிவுக்கு முந்தைய நிலை மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சினை களுக்கு வழி வகுக்கிறது.  ஒரு எளிய உணவுமுறை மாற்றம் வளர்சிதை மாற்ற அபா யத்தைக் குறைக்க உதவும்:  கார்போஹைட்ரேட் உணவு களிலிருந்து தினசரி கிடைக்கும் கலோரிகளில் 5விழுக்காடு தாவர அல்லது பால் புரதங்களுடன் மாற்றுவது நீரிழிவு மற்றும் நீரிழிவுக்கு முந்தைய நிலையை உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது என்பது மாதிரி மாற்று பகுப்பாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஆனால் கார்போஹைட்ரேட் உணவு களுக்கு மாற்றாக சிவப்பு இறைச்சிகளை எடுத்துக் கொள்ளும்போது அவை பாது காப்பானதாக இல்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், இந்த கட்டுரை ஆசிரியருமான டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறுகையில், வெள்ளை அரிசி அல்லது முழு கோதுமை மாவில் இருந்து அதிக அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த தரமான புரதம் கொண்ட வழக்கமான இந்திய உணவுகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை குறைத்து, தாவர அல்லது பால் புரதங்களிலிருந்து அதிக கலோரிகளை எடுத்துக் கொள்ளாமல், வெள்ளை அரிசியிலிருந்து முழு கோதுமை அல்லது தினைக்கு மாறுவது என்பது எந்தவித பலனையும் அளிக்காது என்று தெரிவித்தார். முக்கிய கார்போஹைட்ரேட் மூலங்களைப் பொருட்படுத்தா மல், அனைத்துப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான வளர்சிதை மாற்ற அபாயங்கள் காணப்பட்டதாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை ஆராய்ச்சித் துறை தலை வர் மற்றும் இந்த கட்டுரை ஆசி ரியர்களில் ஒருவருமான சுதா தெரிவித்துள்ளார். மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், ஆய்வறிக்கையின் மூத்த ஆசிரியருமான டாக்டர் வி. மோகன் கூறுகையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் குறிப்பாக உணவு மானியங்கள் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் கொள்கை சீர்திருத்தங்களை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மக்கள் தாவர அடிப்படை யிலான மற்றும் பால் புரதங்கள் நிறைந்த உணவு முறைகளையும், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார். இந்த கட்டுரையின் இணை மூத்த ஆசிரியர் டாக்டர் ஷில்பா பூபதிராஜு கூறுகை யில், நிறைவுற்ற கொழுப்பைக் குறைப்பது ஒரு சவாலாகவே உள்ளது என்றார். ஆரோக்கிய மான எண்ணெய்கள் மற்றும் அதிக பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள மக்களை ஊக்கு விப்பது என்பது நாட்டின் ஆரோக்கியத்தில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போதைய ஊட்டச்சத்து போக்குகளை மாற்றியமைக்கவும், புரத உணவு இடைவெளிகளை குறைக்கவும், நமது உணவு பழக்க வழக்கங்களை மேம்படுத்த வும் இதுபோன்ற உணவுமுறை மாற்றங்கள் உதவும் என்று டாக்டர் வி. மோகன் தெரிவித்தார்.