தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் ஆர்.என். ரவியின் அடாவடி ஆளுநர் மாளிகை வரவேற்பு விழாவை புறக்கணிப்பதாக சிபிஎம் அறிவிப்பு!
சென்னை, ஜன. 19 - தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அடாவடிப் போக்கை, ஆர்.என். ரவி மாற்றிக் கொள்ளாத நிலையில், இந்தாண்டும் அவர் நடத்தும் குடியரசு தின விழாவைப் புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது: ஆர்.என். ரவியின் போக்கு மாறுவதாக இல்லை! குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் நடைபெறும் வரவேற்பு விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநரின் அடாவடிப் போக்கிற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், அவர் நடத்தும் குடியரசு தின வரவேற்பு நிகழ்வை, கடந்த சில வருடங்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்தே வருகிறது. அதற்கான காரணங்கள் எதுவும் மாறாமல் இருக்கும் நிலையில், இந்தாண்டும் ஆளுநரின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி யை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது. அறியாமையும், வன்மமும்..! ராஜ் பவனை ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் ஆலோசனையின் பேரில்தான் ‘மக்கள் மாளிகை’ என்று பெயர் மாற்றம் செய்ததாக பிரதமர் மோடியே அறிவித்திருந் தார். ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே அமைந்திருக்கின்றது. இதேபோன்று, ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக்ஷா அபியான்’ நிதியை இன்றுவரை நிறுத்தியே வைத்திருக் கிறது மற்றும் பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளுக்கு எதிராகவே நின்றிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டளைகளை நிறைவேற்று வதற்காகவே அவதாரம் எடுத்ததுபோல செயல்படுவதை ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய பொறுப்பை மறந்து மார்க்சியம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களின் மீது அவரது அறியாமையிலிருந்து வெளிப்பட்டிருக்கும் வன்மத்தை அவ்வப்போது கொட்டிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத அராஜகம்! தமிழ்நாடு போராடிப் பெற்ற பல உரிமைகளையும், கேள்விக்கு உள்ளாக்கும் வகையிலேயே அவருடைய செயல்பாடும், பேச்சுக்களும் அமைந்திருக்கின்றன. இதன் உச்சபட்சமாகவே மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையை கூட தனது விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி வாசிக்க முனைந்திருக்கிறார். இவற்றி லிருந்து அவர் கொஞ்சமும் மாறவில்லை; தன்னை மாற்றிக் கொள்ளவும் முயற்சிக்கவில்லை என்றே தெரிகிறது. எனவே, இந்த ஆண்டும் ஆளுநர் குடியரசு தின வரவேற்பு விழாவிற்கு அழைத்துள்ளபோதும், அதை புறக் கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.