tamilnadu

புதிய கலைத் திட்டம் உருவாக்கும் பணி: அமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை, டிச.12 - பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை-2025-இன் அடிப்படையில் புதிய கலைத் திட்டம் மற்றும் பாடத் திட்டங்களை உருவாக்க தமிழ்நாடு மாநிலக் கலைத் திட்ட வடிவமைப்புக் குழு வின் கூட்டம் அமைச்சர் அன்பில்  மகேஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் தலைமையிலான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் முதல் கூட்டம் கடந்த நவ.24 ஆம் தேதி  நடைபெற்றது. தொடர்ந்து வியா ழனன்று சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு  பள்ளிக் கல்வி உயர்மட்டக் குழு வின் துணைத் தலைவர் சந்தரமோ கன், இதுவரை நடந்துள்ள கலைத்திட்ட பாடத்திட்ட பணிகள் குறித்தும், குழந் தைகளை ஈர்க்கும் வகையிலும் எதிர் கால படிப்பிற்கு வழிகாட்டும் வகை யிலும் பாடநூல்கள் அமைந்திட உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். கலைத்திட்ட வடிவமைப்புக் குழு வின் தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், பாடத்திட்டம் பாட நூல்கள் எளிய மொழி நடையிலும்,  வகுப்பு மற்றும் வயது நிலைக் கேற்ற குறைவான பாடப்பகுதி களைக் கொண்டும் அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கருத்துகளை எடுத்துரைத்தார். இன்றைய குழந்தைகளின் தேவை களைக் கருத்தில் கொண்டு பல் வேறு பரிந்துரைகள் கலைத்திட்டக் குழு வல்லுநர்களால் கூறப்பட்டன. அனைத்து பாட கலைத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் முறை, பாடப் பகுதிகள், மதிப்பீட்டு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்தனர். கூட்டத்தில் கலைத்திட்ட உறுப்பி னர் செயலரான மாநிலக் கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா வர வேற்புரை ஆற்றினார். இணை இயக்கு நர் புகழேந்தி கூட்டக் கருத்துகளை தொகுத்து வழங்கி நன்றி கூறினார்.