ஏவிஎம் சரவணன் மறைவு: முதலமைச்சர் அஞ்சலி
சென்னை, டிச. 4 - புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரண மாக வியாழக்கிழமை (டிச. 4) அன்று காலமானார். அவருக்கு வயது 86. சிறிது காலமாக உடல்நல பிரச்சனைகளால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மரணமடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகின் முன்னோடி ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய ஏவிஎம் நிறுவனத்தை அவருக்குப் பின்னர் சரவணன் திறம்பட நிர்வகித்து வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் வெற்றித் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் சிகரம் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் சரவணன். முதல்வர் நேரில் அஞ்சலி அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் கட்சித் தலைவர்கள், தயாரிப்பாளர் கள், இயக்குநர்கள், ரஜினிகாந்த், சிவக்குமார், பாக்யராஜ், சூர்யா உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்வுகள் நடை பெற்றன.
