tamilnadu

img

பாஜக ஆளும் ம.பி.,யில் 6 குழந்தைகளுக்கு  எச்ஐவி வைரஸ் பாஜக ஆளும் மத்தியப்பிர

பாஜக ஆளும் ம.பி.,யில் 6 குழந்தைகளுக்கு  எச்ஐவி வைரஸ் பாஜக ஆளும் மத்தியப்பிர தேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்க ளில் தலசீமியா நோயால் (ஹீமோ குளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு) பாதிக்கப்பட்ட வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.பாதிக் கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவி யுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகளுக்கு எச்ஐவி (எய்ட்ஸ்) தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற் பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசா ரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16ஆம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கை யின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல், ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி,  நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.  ஆனால் ரத்தம் கொடுத்தவர்கள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார் கள்? வேறு இடங்களிலும் ரத்தம் கொடுத் துள்ளார்களா? என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.