tamilnadu

img

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 10 புதிய பேருந்துகள் இயக்கம்

அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்  காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ், மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர், 29 குறுஅங்கன்வாடி பணியாளர் மற்றும் 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.  மாவட்டத்தில் வட்டாரம், திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும்.  விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கென 23.04.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தொகுப்பூதிய விவரம்:  தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் தொடர்ந்து பன்னிரெண்டு மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். ஊதிய விவரம்  தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு அங்கன்வாடி பணியாளர் : ரூ.7700/-சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.7700/-24,200/- என்ற விகிதத்திலும், தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு குறுஅங்கன்வாடி பணியாளர் : ரூ.5700/- சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.5700/-18,000/- என்ற விகிதத்திலும், தொகுப்பூதியத்தில் மாதமொன்றுக்கு அங்கன்வாடி உதவியாளர்: ரூ.4100/- சிறப்பு காலமுறை ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.4100/-12,500/- என்ற விகிதத்திலும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிகள் இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கல்வி– அங்கன்வாடி பணியாளர் / குறுஅங்கன்வாடி பணியாளர் பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும். அங்கன்வாடி பணியாளர், குறுஅங்கன்வாடி பணியாளர்களுக்கு 25 முதல் 35 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 25 முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 முதல் 38 (35+3) வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 20 முதல் 40 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 20 முதல் 45 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 20 முதல் 43 (40+3) வயது வரையும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூரச் சுற்றளவு காலிப் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவர், அதே ஊராட்சிக்குட்பட்ட பிற கிராமத்தைச் சேர்ந்தவர், அந்த கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள, அதே வார்டு (அ) அருகில் உள்ள வார்டு (அ) மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.  காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தைகள் மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.  விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.  விதவை, கணவரால் கை விடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/ தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.