tamilnadu

img

மாட்டு வண்டி தொழிலாளர் குடும்பத்துடன் போராட்டம்

மணல் குவாரி திறந்திடுக!

பெரம்பலூர், நவ.15- மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்ப லூர் மாவட்ட பொதுப்பணித் துறை அலுவலகத்தை வியாழன்று குடும் பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  மாநிலச் செயலாளர்கள் கே. பக்கிரிசாமி, எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட கௌரவத் தலைவர் பி.ரமேஷ், மாவட்ட தலை வர் எ.ரவி. பொருளாளர் பாண்டு ரெங்கன், துணைத் தலைவர் பாலு சாமி, மாவட்ட செயலாளர் சங்கர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை மற்றும் எஸ்.பி.டி.ராஜாங்கம், எ.கலையரசி, உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  குன்னம் வட்டம் வெள்ளாற்றி லும், வேப்பந்தட்டை வட்டம் கல்லாற்றிலும் மாட்டு வண்டிக்கு தனியாக மணல் குவாரி அமைத்திட வேண்டும். மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  பின்னர் பெரம்பலூர் வட்டாட் சியர், காவல் துணை கண்காணிப்பா ளர், காவல் ஆய்வாளர், பொதுப்ப ணித் துறை கனிமம் மற்றும் சுரங்கம் உதவி செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் 18-ல் பெரம்பலூர் கோட்டாட்சியர் தலை மையில் அனைத்துத் துறை அலு வலர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தீர்வு கிடைக்கா விட்டால் அடுத்த கட்டப் போ ராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.