tamilnadu

img

காவல்துறையின் திறன் முஷ்டியில் இல்லை: புத்தியில் உள்ளது

கண்ணூர், செப். 2- காவல்துறையின் திறன் முஷ்டியில் அல்ல; புத்தியில் உள்ளது  என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள காவல்துறை அதிகாரிகள் சங்கத்தின் 31ஆவது மாநில மாநாடு முண்டயாடு உள்அரங்கத்தில் நடந்தது. மாநாட்டை துவக்கி வைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மேலும் பேசியதாவது: காவல்துறையில் மூன்றாம் தரமான தாக்குதல் கூடாது என்று 1957இல் இஎம்எஸ் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட காவல்துறை கொள்கையிலேயே தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்போதும் நடப்பது சிறிதளவுகூட பெருமையல்ல. இத்தகைய செயல்களை தொடர்வோர் மீது  எவ்வித கருணையும் காட்ட முடி யாது. முஷ்டியை பயன்படுத்தியல்ல புத்தியை பயன்படுத்தித்தான் காவல்துறை தனது திறனை வெளிப்படுத்த வேண்டும். 

களங்கம் ஏற்படுத்தும் சம்பவங்கள்

காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒருசில சம்பவங்கள்கூட நடக்கக்கூடாது. தவறை சரி செய் தால் காவல்துறையின் பாது காப்புக்கு அரசு துணைநிற்கும். தவறு செய்தால் முகம் பார்க்காமல் நட வடிக்கை எடுக்கப்படும். விசார ணைகளின்போது சுயநல சக்திகள் காட்டும் வழியில் செல்லக்கூடாது. விசாரணை விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும். அந்த விவரங்களை கசியவிடக்கூடாது. இது குற்றவாளிகளுக்கு உதவிய தாகிவிடும். உயர்ந்த இடத்தில் இருப்போரை பாதுகாக்கும் ஏற்பாடு காவல்துறையில் கூடாது.  அண்மைக்காலத்தில் ஏற்பட்ட ஒரு வழக்கில் சாதாரண புத்தியைக்கூட பயன்படுத்தாமல் காவல்துறை செயல்பட்டது. ‘மென்மையான செயல் மென்மை யான மனம்’ என்கிற சொற்றொட ருக்கு ஏற்ப கேரள காவல்துறை பெற்றிருந்த பெருமை ஒரேயொரு சம்பவத்தால் தகர்ந்துபோனது. சாலை விபத்து வழக்குகளில் நல்ல இழப்பீடு கிடைக்கும் வகையில் வழக்கை புனைய சில அதிகாரிகள் ஒரு பகுதியை கேட்பதாக விவரம் கிடைத்துள்ளது. இத்தகைய தவ றான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். கண்டு பிடிக்கப்பட்டால் இந்த பதவியில் மட்டுமல்ல, பணியிலேயே அவரால் நீடிக்க முடியாது என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். சிலர் செய்யும் தவறுக்கு கேரள காவல்துறை முழுவதும் பழி சுமக்க வேண்டியிருக்கிறது. அது கூடாது.  இவ்வாறு முதல்வர் பேசினார்.