திருவனந்தபுரம், ஆக.20- கேரளத்தில் புதனன்று ஒரேநாளில் 2333 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்ட னர். 7 பேர் உயிரிழந்தனர். இதோடு மாநிலத்தின் மொத்த கோவிட் மரணம் 182 ஆக உயர்ந்துள்ளது. புதனன்று நோய் தொற்று கண்டறியப்பட்டதில் 60 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 98 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தொடர்பு மூலம் 2151 பேரு க்கு நோய் தொற்று ஏற் பட்டதில் தொற்றிடம் தெரி யாத 53 பேர் உள்ளனர். 17 சுகாதாரத்துறை ஊழியர்களு க்கு நோய் தொற்று ஏற்பட்டுள் ளது. 1217 பேர் குணமடைந்த னர். இதுவரை மொத்தம் 32,611 பேர் குணமடைந் துள்ளனர். தற்போது நோய் தொற்றுடன் 17,382 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,69,687 பேர் தற்போது கண்காணிப் பில் (தனிமை) உள்ளனர். இதில் வீடுகள்/நிறுவனங்க ளில் 1,55,928 பேரும், மருத் துவமனைகளில் 13,759 பேரும் உள்ளனர். புதன ன்று 1730 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டனர். அதே நேரத்தில் பரி சோதனைகள் அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,291 மாதிரிகள் பரிசோதிக் கப்பட்டன. இதுவரை மெத்தம் 12,76,358 மாதிரி கள் பரிசோதனைக்கு அனுப் பப்பட்டன. இதில் சுகாதா ரத்துறை, பொது நல ஊழியர் கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,53,433 மாதிரிக ளும் உள்ளன. புதனன்று 19 புதிய ஹாட்ஸ்பாட்டுகள் உருவாயின. 12 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டிலிருந்து விலக் கப்பட்டன. மாநிலத்தல் தற்போது மொத்தம் 572 ஹாட்ஸ்பாட்டுகள் உள்ளன.