கொச்சி, மே 9- மாலத்தீவிலிருந்து வெள்ளி யன்று இரவு 732 பயணிகளுடன் புறப்பட்ட கப்பற்படைக்கு சொந்த மான ஐஎன்எஸ் ஜலாஷ்வா கப்பல் ஞாயிறன்று கொச்சி வந்தடைய உள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து மாலத்தீவில் சிக்கிய கேரளியர்களை அழைத்துவர கேரள அரசு மத்திய அரசின் உதவி கோரியது. அதன்படி கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலாஷ்வா கப்பல் மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ளி யன்று காலையிலேயே பயண த்துக்கு தயாராக மக்கள் குவியத் தொடங்கினர். ஆனால் கோவிட் பரி சோதனைகள் தாமதமானது. இரவு 9 மணியளவில் கப்பல் மாலியில் இருந்து புறப்பட்டது. பயணிகளில் 19 கர்ப்பிணிகள், குழ ந்தைகள் உள்ளனர். விமான நிலை யத்தில்தான் கோவிட் பரிசோ தனைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு தேவை யான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று பயணிகள் புகார் கூறினர். தனி மனித இடைவெளியை பின்பற்ற முடி யாத அளவுக்கு. விமான நிலை யத்திற்கு ஒரே நேரத்தில் நூற்றுக்க ணக்கானோர் வந்தனர். கவுண்டர்கள் போதுமான அளவு இல்லை என்ப தால், அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. கொச்சியில் உள்ள துறைமுக அறக்கட்டளையால் பயணிகளை வர வேற்க விரிவான ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன. துறைமுகத்தில் உள்ள கடல் பயண முனையத்தில் குடிவரவு பதிவுக்கான (இமிக்ரேசன்) வசதி செய்யப்பட்டுள்ளது. போதுமான கவுண்டர்கள் மற்றும் கோவிட் பரி சோதனைகளுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 50 பயணி கள் வீதம் பரிசோதனைக்கு அழைத்து வரப்படுவார்கள். அனைவரையும் கண்காணிப்பு மையத்திற்கு கொண்டு செல்ல 50 கேஎஸ்ஆர்டிசி பேருந்து கள் மற்றும் பிற வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.