tamilnadu

img

காரில் சென்று ஆடு திருடிய பாஜக நிர்வாகி கைது!

கரூர்,செப்.30- அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளைத் திருடிய பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் காரில் சென்று ஆடுகளை திருடிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி ரஞ்சித் குமார், சதீஷ்குமார், சிவக்குமார் ஆகியோரை கைது. மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
அவர்கள் வந்த காரில் பாஜக கொடியும், பிரதமர் மோடி படமும் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் ஆடுகளைத் திருடிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியிருந்தது. விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் பாஜக நிர்வாகி என்பதும் இறைச்சிக் கடை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.