காஞ்சிபுரம், மார்ச் 7- காஞ்சிபுரம், பிள்ளையார்பாளை யம், கிருஷ்ணன் தெரு பகுதியில் உள்ளது சேர்மேன் சாமிநாத முதலியார் மேல்நிலைப் பள்ளி. 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இரு தளங்கள் உள்ள இந்த பள்ளி யில் உள்ள ஜன்னல் கதவுகளின் கண்ணாடிகள் உடைந்து உள்ளன. அதிக காற்று வீசும்போதும், ஜன்னலை மூடும்போதும் மாணவர்களின் கைகளை கிழித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளியின் கண்ணாடி களை உடடினயாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.