சிதம்பரம்,செப்.16- சிதம்பரத்தை சேர்ந்த ஆரோக்கிய தாஸ் (51), இவர் மத்திய துணை ராணுவ படை பாதுகாப்பு ரோந்து வாகன பொறுப்பாள ராக ஸ்ரீநகரின் டால் ஏரி பகுதி யில் பணி செய்து வந்தார். சனிக்கிழமை (செப்.14) நள்ளிரவில் பணியிலிருந்த போது இறந்து கிடந்ததாக சிதம்பரத்திலுள்ள அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் திங்களன்று (செப்.16) காலை சிதம்பர த்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு 21 குண்டு கள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையாவிடம் 2015 ஆம் ஆண்டு, சிறந்த பாதுகாப்பு பணிக்கான விருது பெற்றது குறிப்பிட த்தக்கது. மேலும் ஐ.நா அமைதி பாதுகாப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டு நெதர்லாந்தில் 18 மாதங்கள் பணியாற்றியுள்ளார். மு.க ஸ்டாலின் துணை முதல்வ ராக இருந்த போது அவரது பாதுகாப்பு பணியில் கன்மேனாக இருந்துள்ளார். ஆரோக்கிய தாஸூக்கு ஆரோக்கிய செல்வி (48) என்ற மனைவியும், ஆகாஷ் (24) என்ற மகனும், சுபிக்ஷா (19) என்ற மகளும் உள்ள னர்.