கடலூர், ஜூலை.22- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் கடலூர் மாவட்ட 4 வது மாநாடு கடலூ ரில் சி.ஜி நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.துரைராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலை வர் ஜி.ஆனந்தன் துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வி.சுப்புராயன், மாநில குழு உறுப்பினர் பி.வாஞ்சிநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பை யன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் டி.மணவாளன் நன்றி கூறினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் மாணவர்கள் சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர் களை அலைகழிக்காமல் தாமதமின்றி சான்றி தழ் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இம் மாநாட்டில் மாவட்டத் தலைவராக பி.வாஞ்சிநாதன், செயலாளராக வி.சுப்பு ராயன் பொருளாளராக டி.மணவாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.