tamilnadu

கடலூரில் கூடுதலாக 2 சோதனைச்சாவடி

 கடலூர், ஜூன் 16- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்ப டுத்தப்பட்ட பொதுமுடக்கத்தினால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் உரிய அனுமதி பெற்றுச்  செல்பவர்களை பரிசோதிப்பதற்காக மாவட்ட எல்லை களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  அந்த வகையில் சென்னை, புதுச்சேரியிலிருந்து கடலூ ருக்குள் வருபவர்களை சோதனையிடும் வகையில் மாவட்ட  எல்லையான சின்னகங்கணாங்குப்பத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது. அங்கு, வாகனங்களில் பயணிப்போரின் விபரம் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஜூன் 19ஆம்  தேதி முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், சென்னையிலிருந்து வெளியேறுபவர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு வதால் கடலூர் மாவட்டத்தில் தொழுதூர், கண்டரக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சின்னகங்கணாங்குப்பம் சோதனைச்சாவடியில் கூடுதல் மருத்துவக்குழுவை நியமித்து முழுமையாக பரிசோதிக்கவும் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.