tamilnadu

img

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக

கடலூர், ஆக. 17- பிரதமரின் கிசான் திட்டத்தில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர்  தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் எஸ்.தஷ்ணா மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் விவசாயி அல்லாத போலியான நபர்களை பிரதம மந்திரி விவசாயிகள் உதவி திட்டத்தில் ஆயிரக்கணக்கில் இணைத்துள்ளனர்.  கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 5 லட்  சத்திற்கும் மேற்பட்டவர்கள் இது போல் இணைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 4,000 ரூபாய் நிதி பெற்றுள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பாஜகவை சார்ந்த வர்கள், புரோக்கர்கள் இந்த முறை கேடுகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசா ரணைக்கு தமிழக அரசு உத்தரவிட  வேண்டும், தகுதியான விவசாயி களுக்கு நிதி கிடைப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும், குத்தகை  விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன டைய ஏற்பாடு செய்ய வேண்டும், விவ சாய விளை பொருட்களுக்கு கட்டுப்  பாடியான விலை நிர்ணயம் செய்ய  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், ஒன்றியத் தலைவர்  ஆர். பஞ்சாட்சரம், பால் சங்க தலைவர் பழனி, அண்ணாகிராமம் ஒன்றியச் செயலாளர் முருகன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.அமர்நாத், விவசாயிகள் கே.எஸ்.சம்பந்தம், ஆறுமுகம், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சிதம்பரம் கீரப் பாளையம் வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தர்ம துரை, ராஜேந்திரன், செல்லையா, நெடுஞ்சேரலாதன், முருகன், சிவ ராமன், பாலசுந்தரம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.