tamilnadu

img

அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு

கடலூர்,பிப். 27- அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அக்கடவல்லி பஞ்சாயத்தில் பல்வேறு முறைகேடு கள் நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கிராம பொதுமக்கள் சார்பில் கடலூர் மாவட்ட  ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டது. அதுகுறித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: பண்ருட்டி வட்டம், அண்ணா கிராமம் ஒன்றியம்  அக்கடவல்லி ஊராட்சியில் பல கட்டுமான பணி களில் முறைகேடு நடந்துள்ளது. தனிநபர் கழிவறை  கட்டுவதில் இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள் பெயர்களில் கழிவறைகள் கட்டியதாக முறைகேடு நடைபெற்றுள்ளது. அதேபோன்று மரக்கன்று நடு வதிலும், வாட்டர் டேங்க் மோட்டார் சரி செய்வதிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. பசுமை வீடு கட்டும் திட்டத்தில், தானே புயல் வீடு கட்டுவதிலும் பல்வேறு வகையில் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது.  இந்த முறைகேடுகளை அக்கடவல்லி ஊராட்சி  எழுத்தராக பணிபுரியும் ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட வர்கள் செய்துள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து  தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், ஆரா முதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.