காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட டங்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று பனிப்பாறைகள் சரிந்து விழுந்தது. நேற்று மாலை பருவநிலை மாறியதால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை மீட்பு பணிகள் தொடங்கியது. இந்த விபத்தில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பனிக்குவியலில் இருந்து ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.
இதேபோல், பன்டிப்போரா மாவட்டத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.