tamilnadu

img

‘இந்திய மக்களாகிய நாம்’ - வழக்கறிஞர் பெ.திருமலைராஜன்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் மூன்று வார்த்தைகளாகிய ‘இந்திய மக்களாகிய நாம்” என்பது இன்று இந்திய மக்களின் பிரதான மான முழக்கமாகிவிட்டது. இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஏன் சிறுவர்கள் கூட இந்தக் கோஷத்தையும், ‘விடுதலை’(azadi) என்பதையும் இணைத்துப் போராட ஆரம்பித்துள்ளனர். இந்தக் கோபக் குமுறலுக்கான காரணம் என்ன என்பதையும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேட்டுச் சட்டம், தேசிய மக்கள் தொகை சட்டம் ஆகியவை முறியடிக்கப்படவேண்டும் என்பதற்கான காரணங்களையும் அறிந்துகொள்வது அவசியம்.

பின்னணியில் உள்ள கொடூரங்கள்?

இந்தச் சட்டங்களை எதிர்த்து முதலில் அசாம் மாநி லத்தில் கிளம்பிய போராட்டத் தீப்பொறி இந்தியா முழுவதும் பரவி நாட்டின் பல பாகங்களிலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.  அசாமில் இது துவங்கியதற்கான காரணம் என்ன? உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய அசாம் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளன. அசாமில் ஏற்கனவே 19 லட்சம் மக்கள் குடியுரிமை அற்ற அந்நியர்கள் என்று பிரகட னப்படுத்தப்பட்டு அதில் 7 லட்சம் பேர் அடைப்பட்ட முகாம்க ளில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  மீதி 12 லட்சம் மக்கள் அதேபோன்று முகாம்களில் தள்ளப்படுவதற்கு முகாம்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  ”அடைப்பட்ட முகாம்கள்” என்ற பெயரைக் கேட்ட உடன் நமக்கு ஜெர்மனியின் நாஜி அரசாங்கமும், ஹிட்லரும் ஞாபகம் வருவது இயல்பு. அதே போன்று ஹிட்லரின் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட பலி யானவர்கள் சுமார் 60 லட்சம் யூதர்கள் என்று குறியிடப் பட்டுள்ளது. அந்த 60 லட்சம் யூதர்கள் அன்று ஐரோப்பா முழுமையிலும் வசித்து வந்த யூத மக்களின் ஜனத் தொகையில் மூன்றில் இரண்டு பங்காகும்.  மேலும், இந்த 60 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் குழந்தைகளும், பெண்களும் இருந்தனர் என்று அறியும் போது நமக்கு ஏனோ குஜராத்தின் இனப்படுகொலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரிகளும், அவர்களின் குழந் தைகளும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். குஜராத் கல வரத்தின்போது மாநில முதலமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்த நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தற்போது இந்தியாவின் பிரதம அமைச்சராகவும், மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ளார்கள் என்பதை நினைக் கும்போது அவர்கள் இருவரும் ஜெர்மனியின் ஹிட்லரின் இத்தாலியின் முசோலினியின் வழித் தோன்றலாகவே தோற்றமளிக்கின்றனர். “கோத்ரா” சம்பவத்திற்குப் பின் குஜராத்தில் நடைபெற்ற இனப் படுகொலை தற்போது சிஏஏ வகை சட்டங்கள் அமலாக்கப்படும்போது மீண்டும் இந்திய நாடு முழுவதும் அரங்கேற்றப்பட உள்ளதா என்பதை காலம்தான் முடிவு செய்யும். 

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒரு விஷயத்தைத் திரும்ப திரும்பக் கூறி வருகின்றனர். ஏற்கனவே இந்திய வாக்காளர்கள் தங்க ளுக்குப் பெரும்பான்மை அளித்து ஆட்சிக்கு அனுப்பி யுள்ளனர். எனவே, தங்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி ‘இந்து ராஷ்ட்ரம்” அமைப்பது தங்களது குறிக்கோள் என்றும், அதனால் எக்காரணம் கொண்டும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர், ஆகியவற்றை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி வருகின்றனர். இந்த இருவரும் தங்க ளுடைய குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்கள் என்பதை கடந்த  கால அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றது. அரசு இயந்திரத்தை குறிப்பாக காவல்துறையை எப்படி தங்க ளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கலையில் இவர்கள் கைதேர்ந்தவர்கள்.  காவல்துறை யினரின் ஆதரவுடன் காவல்துறை சீருடை அணிந்த மற்றும் சீருடை இல்லாமலேயே காவிப்படையைச் சார்ந்த குண்டர் கள் வைத்து என்ன செய்யமுடியும் என்பதை ஜேஎன்யூ மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக் கழக வன்முறைகள் நிரூ பித்துள்ளன. தற்போது இந்துத்துவா கும்பலைச் சார்ந்த வர்கள் துப்பாக்கிகளோடு வந்து போராடும் மக்களை பயமுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுள்ளன. 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இரண்டாவது தொகுதி யில் (Part II) உள்ள 11-வது பிரிவின்கீழ் இந்திய குடிமகன் குடியுரிமை பற்றிய விஷயங்களை நெறிமுறைப்படுத்த நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை முற்றி லும் தவறாகப் பயன்படுத்தி நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயிராக உள்ள மதச்சார்பின்மையையும், பன்முகத் தன்மையையும் முற்றிலுமாக அழிக்க முற்பட்டுள் ளார்கள். அந்த கேடு கெட்ட முயற்சியில்தான் இந்தியக் குடி யுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்திய தேசிய மக்கள் பதிவேட்டுச் சட்டம் (என்ஆர்சி) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவுச் சட்டம் (என்பிஆர்) ஆகியவைகளை நிறைவேற்றி யுள்ளனர்.  ஆனால் இந்தச் சட்டங்கள் இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் சட்டங்கள் இன அழிப்பிற்கு அடிகோலும் சட்டங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஏற்றுக் கொண்டுள்ள நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்க கூடிய சட்டங்கள் என உணர்ந்துதான் மாணவர்கள், இளைஞர்கள், ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவரும் தங்களுடைய சாதி, மத, இன வித்தியாசங்களை மறந்து நாட்டின் பல பகுதிகளி லும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பலர் இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலாக்கப்பட்டால் ஏற்படப்போகும் விளைவுகளை சூழ்ந்து சிந்தித்து உணரவில்லை. இந்தியப் பாசிஸ்டுகளின் வார்த்தை ஜாலங்கள் மற்றும் மாய் மாலங்களை உண்மையென நம்பிக் கொண்டிருக் கின்றனர்.  இச்சட்டங்களால் மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் ஏற்படப்போகும் கதி உலக வரலாற்றில் ஜெர்மானிய மக்க ளுக்கும், ஜெர்மனிக்கும் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஏற்பட்ட அவப்பெயரும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களைப்போன்ற ஒன்றாகும் என்பதை உணர்த்துகிறது. 

ஏற்படப்போகும் பேரபாயங்கள்

இந்த சட்டங்களினால் ஏற்படப் போகும் பேராபத்துக் களை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் இச்சட்டங்களோடு எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல் தனியாக இருக்கும் மற்றொரு முக்கியமான சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். தெரிந்தோ, தெரியாமலோ அச்சட்டத்தைப் பற்றிய உண்மைகள் மக்களில் பலருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை.  ஏன் கல்வி அறிவு பெற்ற பலருக்குக்கூட இந்த விஷயம் தெரிய வில்லை.  அதுதான் அந்நியர்கள் சட்டம் என்றழைக்கப் படுகின்ற The Foreigners Act 1946.  இந்த சட்டம் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்தபோது பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கப்பட்ட சட்டம்.  பின்னர் இந்தச் சட்டம் இந்திய அரசா லும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது அமலிலும் உள்ள ஒரு சட்டமாகும். இந்தியக் குடிமகன்கள் அல்லாத அந்நி யர்கள் நம் நாட்டிற்குள், வருவதற்கும், இங்கே தங்கியி ருக்கவும், பின்னர் திரும்ப செல்வதையும் வழிமுறைப் படுத்துகிற சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய சட்டமாகும்.  இந்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில்தான் இந்திய நாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்திற்குப் பின்பும் தங்கி யிருக்கக் கூடிய அந்நியர்கள், எந்தவிதமான ஆவணங்க ளும் இல்லாமல் இந்தியாவிற்குள் தங்கி இருக்கும் அந்நி யர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் ஆகியோர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக பார்த்தோமெனில் இதில் உள்ள ஷரத்துக்களைப் பற்றிக் குறை சொல்ல ஏதும் இல்லை.  ஆனால் இந்த சட்டத்தை சிஏஏ,என்பிஆர், என்ஆர்சி, சட்டங்களோடு இணைத்துப் பார்த்தால்தான் தற்போது நிறைவேற்றப்பட்டு நாமெல்லாம் எதிர்த்துப் போராடக்கூடிய சிஏஏ,என்பிஆர், என்ஆர்சி ஆகியவை ஏற்படுத்தப் போகிற பேராபத்துக்கள் பற்றித் தெரிந்து கொள்ளமுடியும். 

அந்நியர்கள்  சட்டம் கூறுவது என்ன?

அந்நியர் சட்டத்தின்கீழ் மொத்தமாக 16 பிரிவுகள் தான் உள்ளன.  அவற்றில் தற்போது சிஏஏ,என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை இணைத்துப் பார்க்க வேண்டிய சில  அம்சங்கள் மட்டும் கீழே குறிப்பிடப்படுகிறது. அந்நியர் என்பவர் யார் என்பதை 2-வது பிரிவிலேயே குறிப்பி டப்பட்டுள்ளது. இந்தியக் குடிமகன் அல்லாதவர் அந்நிய ராவார். அப்படிப்பட்ட அந்நியர் என்ற வரையறைக்குள் வரும் பொதுவாகவோ அல்லது தனி நபருக்கு எதிராக வோ அல்லது குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதியி னருக்கோ, அல்லது குழுவினருக்கோ எதிராக, மத்திய அரசு இந்திய நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்ய அல்லது வெளியேறுவதை அல்லது இங்கேயே தங்கி இருப்பதைப் பற்றியும் உத்தரவுகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.  (3-வது பிரிவு) பிரிவு 3(சி)-யின்கீழ் அப்படி (வரையரைக்கப்பட்ட) அந்நியர் இந்திய நாட்டில் தங்கக்கூடாது என்றும், பிரிவு (3சிசி)-ன்கீழ் அப்படித் தங்கியிருக்கக் கூடியவர்களை வெளியேற்றுவதற்கும், வெளியேற்றும் வரை ஏற்படக்கூடிய செலவுகளை அவர்களிடமிருந்து எந்தவிதமான வழிவகை களிலும் (Resources) வசூலிக்கவும், பிரிவு (2)(டி)-ன்கீழ் அவர் இருந்த இடத்தில் இருந்து வெளியேறி அரசு நிர்ணயிக்கக்கூடிய இடங்களில் தங்க வேண்டும் என்றும், 

பிரிவு 2(இ)-ன்கீழ் அவருடைய அனைத்துவிதமான சுதந்திரத்தையும் முடக்கவும், குறிப்பிட்ட இடங்களில் தங்கவும், அதிகாரிகள் கேட்கின்றபொழுது தன்னுடைய அடையாளத்தை காண்பிக்கக்கூடிய ஆதரவு சான்றுகளைக் காட்ட வேண்டும். மற்ற எந்த இந்தியக் குடிமகன்களோடோ, குழுவினரோடோ கலந்து கொள்ளக்கூடாது. எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடை செய்யவும்.  எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நபர்களை கைது செய்து அடைப்பு முகாமில் அல்லது சிறையில் வைக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரிவு 4(1)ன்கீழ் - அப்படிப்பட்ட அந்நியர்கள் மேலேசொன்ன பிரிவுகளின்படி அடைப்புக் காவலில் அடைக்கப்பட்டால் சட்ட வரையறைக்கு உட்பட்டும், ஒழுங்கு முறைக்கு உட்பட்டும் நடக்க வேண்டும் இல்லையெனில் மத்திய அரசால் அவ்வப்போது குறிப்பிடப்படும் தண்ட னைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

பிரிவு (4) (பி)-ன் கீழ் எந்த ஒரு நபரும் அடைப்பு முகாமில் இருக்கும் நபருக்கு அவர் தப்பிச் செல்வதற்கு எந்தவிதமான உதவியும் செய்யக்கூடாது. 

பிரிவு 8(1)-ன்கீழ் சம்பந்தப்பட்ட நபர் எந்த நாட்டைச் சார்ந்த வர் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கே உண்டு. 

பிரிவு 8(2)ன்கீழ் மேலே கூறப்பட்ட அதிகாரியின் முடிவை பரிசீலிக்க எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் கிடையாது. 

பிரிவு (9)-ன்கீழ்  :  மேலே குறிப்பிட்ட பிரிவு 8-ன்கீழ் ஒரு குறிப்பிட்ட நபர் தான் அந்நியன் அல்ல.  அல்லது ஒரு குறிப்பிட்ட வகைக்குள் வருபவரல்ல அல்லது தொகுப்புக் குள் வருபவரல்ல என்று கூறினால் அதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த நபரையே சாரும். 

பிரிவு 14-யின்கீழ் இந்த சட்டப்பிரிவுகளையும், உத்தரவு களையும் மீறுபவர்களையும் 5 வருடம் வரை தண்டிக்க வழி செய்கிறது. 

பிரிவு 14(சி)-யின்கீழ் இக்குற்றத்தை செய்வதற்கு உதவி செய்பவருக்கும் இதே தண்டனை வழங்கவும் வழி செய்கிறது. 

நாம் இப்போது முதலில் கூறியபடி இந்தச் சட்டத்தை சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுடன் இணைத்துப் பார்த்தால் என்னென்ன ஆபத்துக்கள் நம்மை எதிர்நோக்கி உள்ளன என்பது தெளிவாகப் புரியும்.  இன்னும் சில விளக் கங்களைக் கொடுத்தால் அது முழுமையாகப் புரியும். 

எதிர்நோக்கியுள்ள அபாயங்கள்  அந்நியன் என்பதற்கான வரையறை 

இந்தச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன் அல்லாத நபர்கள் அனைவரும் அந்நியர்கள் ஆவர்.  அதாவது சிஏஏ, என்பிஆர்,என்ஆர்சி இவைகளின்கீழ் வராதவர்கள் அல்லது நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது தகுந்த (அவர்கள் விரும்புகிற) ஆதாரங்களைக் காட்டி நிரூபிக்க முடியாத  நபர்கள் அத்துனை பேரும் அந்நியனாகும்.  அந்த நபர் எத்தனை தலைமுறையாக இந்த நாட்டில் வாழ்ந்தாலும் எவ்வளவு உழைத்திருந்தாலும், வியாபாரம் மற்றும் தொழில் செய்து சொத்துக்கள் வாங்கி அது அவர்கள் பெயரில் இருந்தாலும் என்பிஆர், என்சிஆர் ஆகியவைகளில் குறிப்பி டப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இயலா விட்டால் அவர் அந்நியன் என்ற வரையறைக்குள் வந்து விடுவார்.  சாதாரண ஏழை பாமர மக்களிடம் ஆதார் அட்டை,  ரேசன் அட்டை இவைகளைத் தவிர எந்த ஆவணங்க ளையும் எதிர்பார்க்க முடியாது.மேலும், பிறப்பு இறப்பு பதிவுச்  சட்டமே 1969-வருடத்தில்தான் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னர் கிராம மணியக்காரர் பகுதி நேர கிராம நிர்வாக அதிகாரியாக இருந்துவந்தார்.  அந்த உரிமையே பரம்பரை உரிமையாக இருந்து வந்தது. அவர்கள் யாரும் எந்தவிதமான ஆவணங்களையும் வைத்துக் கொண்டி ருக்கவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் அது எங்கே உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. 

மற்றொரு புறம் பார்த்தால் ஒரு நபர் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்திருப்பார். அவருடைய பெற்றோர்கள் அலுவல் காரணமாகவோ, வயிற்று பாட்டிற்காகவே ஒரு மாநிலத்திற்கு குடிபெயர்ந்திருப்பார். இந்தக் குழந்தை இளைஞனாக வளர்ந்தபோது அவரது பெற்றோர்கள் இறந்திருப்பார்கள். இவருக்கோ உறவி னர்கள் பற்றியும், தன்னுடைய பிறப்பு பற்றி எந்தவிதமான தகவலும் தெரியாதநிலையில் அவர் தனது குடியுரிமையை நிலைநாட்ட முடியாதவராக இருப்பார். எனவே, அவரும், அந்நியர் என்கிற வரையறைக்குள் வந்துவிடுவார். இந்தியா முழுமையும் இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்க ளுக்கெல்லாம் இதேதான் பிரச்சனையாக இருக்கும்.  இந்த அந்நியர் சட்டத்தின்படி (1946) ஒருவர் அந்நியன் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த நபரையே சாரும்.  மேலும் ஏதாவது ஆவணங்கள் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ இது சம்பந்தமாக நியமிக்கப் பட்ட அந்த குறிப்பிட்ட அதிகாரியின் விருப்பத்தை பொறுத்தது. அந்த அதிகாரியின் முடிவை எதிர்த்து எந்த நீதிமன்றத் திற்கும் நீங்கள் செல்லமுடியாது.

அபாயம்-2

மேலே கூறியபடி, சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்-ன்கீழ் குடிமகன் இல்லையென்று நிலை ஏற்பட்டால் என்ன நடக்கும். அவர் அந்நியன் என்ற நிலைக்கு அடுத்துத் தள்ளப்படுவார். அடுத்தக்கட்டமாக அவரை அரசு இந்தியாவைவிட்டு வெளியேற உத்தரவிடும். அப்படி வெளியேற்றப்பட உள்ளவர் எந்த நாட்டிற்கு வெளியேற்றப் படுவார்? அவருக்குச் சொந்த நாடே இந்தியாதான் என்று கருதி அவர் வாழ்ந்து வருபவராவார். அவருக்கு வேறு நாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். எந்த நாடும் அவரை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கும். அந்த நாட்டிற்கு அதற்கான சட்டப்பூர்வமான நியாயமான தார்மீக உரிமையும் உண்டு. 

அபாயம்-3

அப்படி வெளிநாட்டிற்கு அனுப்ப இயலாத நிலை ஏற்படின் அந்நியன் என்ற வரையறைக்குள் வந்த நபர் சொந்த நாட்டிலேயே அகதியாக்கப்பட்டு அடைப்பு முகாமில் வைக்கப்படுவார். அவருக்காக ஏற்படும் செலவுகள் முழுவதும் அவர் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களிலிருந்து சரி செய்யப்படும். அதாவது அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்து கொள்ளும் என்று மறைமுகமாகக் கூறப்படுகிறது. 

அபாயம்-4

அப்படி அடைப்பு முகாமில் வைக்கப்படுபவர் எந்த உரிமை யும் கொண்டாட முடியாது.  தங்களுடைய சுதந்திரத்தை முழு மையாக இழந்து அடைப்பு முகாமின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தற்போதுள்ள அகதிகள் முகாம்களைப் போன்றே வாழ வேண்டியிருக்கும்.  சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவைகள் இந்தியா வில் உள்ள முஸ்லிம் மக்களை பாதிக்காது என்று சிஏஏ ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.  ஆனால் அது உண்மை யல்ல.  இந்த சட்டங்களைக் கொண்டு வரும் அதே நேரத்தில் இந்திய பாசிஸ்டுகள் பகிரங்கமாகவே “இந்து ராஷ்டிரம் ஏற்படுத்துவதுதான் எங்கள் தேர்தல் வாக்குறுதி” என்று பகிரங்கமாக சத்தம் போட்டுச் சொல்லி வருகின்றனர். ஆகை யால் இந்துக்கள் முதல் தரக் குடிமகனாகவும், மற்றவர்கள் இரண்டாந்தரக் குடிமகனாகவும், மாற்றப்படுவார்கள்.  இதன் தொடர்ச்சியாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயிர் நாடியாகக் கருதப்படும் மதச் சார்பின்மை மற்றும் பன்முகத் தன்மையை ஆதரித்து கருத்துத் தெரிவிப்ப வர்களும், இரண்டாம் தரக் குடிமகனாக மாற்றப்படுவார்கள். அல்லது அழிக்கப்படுவார்கள். 

நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவும், இந்திய மக்களைப் பிளவுபடுத்தவும், தங்களுடைய போலித்தனமான வாதங்கள் மூலமாக தங்கள் செயல்களை நியாயப்படுத்தவும் ஆர்எஸ்எஸ் கும்பல் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி என்கிற, விஷ விதைகள் ஊன்றிவிட்டனர்.  இந்த விஷவிதைகள் முளைத்து விஷ விருட்சமாக வளர்வதற்கு முன்னர் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

கட்டுரையாளர் : மூத்த வழக்கறிஞர், ஈரோடு