பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை,மார்ச் 19- தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மார்ச் 19 வியாழனன்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களுக்கான படுக்கை வசதி உட்பட அனைத்து வசதிகளையும்கொண்ட சிறப்பு மருத்துவமனைகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட நபர்களுடன், சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் காணொலிக் காட்சி மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ அறிவுரைகளும், ஆற்றுப்படுத்துதலையும் தொடர்ந்து வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் நோய்த் தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தீவிர மாக மேற்கொள்ளப்பட வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்புக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கையுரைகள், காலணிகள் ஆகியவை போதிய அளவில் வழங்கப்பட வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் ஊராட்சிகளில், மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினியை நாளொன்றுக்கு இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
வாரச் சந்தைகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும். மக்கள் மிக அதிகமாகக் கூடக்கூடிய நீதிமன்றங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தீவிர நோய்த் தடுப்புரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நாள் ஒன்றுக்கு மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறு வனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங் கள் நோய்த் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்நிறுவனங்களில் நோய் தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்நிறுவனங்களில் உள்ள உணவகங்களை மிகவும் தூய்மை யாக பராமரிக்க வேண்டும்.
ஜவுளி-நகைக்கடைகள் மூடல்
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் ஏற்கனவே, வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மக்கள் அதிகம் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த குளிர்சாதன வசதி கொண்ட பெரிய ஜவுளிக் கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவற்றில் அதிக மக்கள் கூட்டம் கூடுவ தால், இவை நாளை (வெள்ளி) முதல் மூடப்படும். எனினும், நகைக் கடை போன்றவற்றில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்படி பொருட் களை பெற்றுச் செல்ல மட்டும் ஒரு தனி வழியை பயன்படுத்தலாம். அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய் கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை வழக்கம் போல் செயல்படும்.
கோவில்- தேவாலயம்-மசூதிகளில் மக்கள் வரத்தடை
சென்னையில் வடபழனி முருகன் திருக்கோ வில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெரு மாள் திருக்கோவில், மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் திருக் கோவில், திருச்செந்தூர் முருகன் திருக்கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில், பழனி முருகன் திருக்கோவில், திருவண்ணா மலை அண்ணாமலையார் திருக்கோவில், திருத்தணி முருகன் திருக்கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்பட அதிக மக்கள் வரக்கூடிய மிகப் பெரிய திருக்கோவில் களில் நாளை (வெள்ளி) முதல் 31 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், ஆகம விதி களின்படி, திருக்கோவில்களில் அனைத்து கால பூஜைகளும் எப்பொழுதும் போல் நடை பெற வேண்டும். அதே போன்று, அதிக மக்கள் வரக்கூடிய பெரிய தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் / தர்காக்களில் 31 ஆம் தேதி வரை பொது மக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சம்பந்தப் பட்ட நிர்வாகிகளிடம் பேசி தகுந்த அறிவுரை வழங்கி, அதனை கடைப்பிடிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து நோய் பரவ வாய்ப்புள்ளதால், மாநிலங்களுக்கு இடையே யான பேருந்து போக்குவரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதே போல், பிற மாநிலங் களில் இருந்து வரும் ரயில் போக்குவரத்தையும் கணிசமாகக் குறைக்க தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் கேட்டுக் கொள்ளப்பட்டார். விமான நிலையங்களில், உள்நாட்டு முனை யத்தில் சோதனைகளை தீவிரப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான ரயில் மற்றும் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிர மாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறை கள் அறிவுறுத்தப்படுகிறது.
ரயில் மற்றம் சாலை மார்க்கமாக வரும் பயணிகளை தீவிரமாக சோதனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய பயணி களை அழைத்துச் செல்வதற்கென விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சிறப்பு வாகன ஏற்பாடுகளை செய்ய அறி வுறுத்தப்பட்டது. அத்தகைய வாகனங்களை கிருமிநாசினி மூலம் அடிக்கடி தூய்மைப்படுத்தி யும், அதன் ஓட்டுநர்கள் முழு பாதுகாப்புடன் வாகனங்களை இயக்குவதற்கான வசதிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. கிருமிநாசினி தெளிப்பான்கள் மற்றும் பிற உபகரணங்கள் தேவையான அளவு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அரசு எடுத்து வரும் இத்தகைய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பினை நல்கி, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும், அர சுடன் மக்களும் இணைந்து இந்த கொரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழ்நாட்டினை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.