இலகுரக சரக்கு வாகன மாநில சிறப்பு மாநாடு வலியுறுத்தல்
கோயம்புத்தூர், நவ. 17 – சுங்கச்சாவடி கட்டண கொள்ளை யைத் தடுத்து, இலகுரக வாகனங் களை கட்டணமில்லாமல் அனுமதிக்க வேண்டும் என இலகுரக சரக்கு வாகன தொழில் மற்றும் தொழி லாளர் சிறப்பு மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் (சிஐடியு) சார்பில் இலகு ரக சரக்கு வாகன தொழில் மற்றும் தொழிலாளர்கள் சிறப்பு மாநாடு கோவையில் ஞாயிறன்று நடை பெற்றது. ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எம்.ரபிக் தலைமை தாங்கினார். சம்மேளன துணைத் தலைவர் இராயப்பன் வரவேற்றார். சிஐடியு மாநில உதவித் தலைவர் நாகராஜன் துவக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து சம்மேள னத்தினுடைய துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் உரையாற்றி னார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன் ஆகியோர் உரையாற்றினர். சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் எஸ்.மூர்த்தி அறிக்கையை முன்வைத்து பேசினர். மாநாட்டை நிறைவு செய்து சம்மேளன தலைவர் கே.ஆறுமுக நயினார் உரையாற்றினார்.
தீர்மானங்கள்
முன்னதாக இம்மாநாட்டில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. காலாவதியான டோல்கேட் வசூலை நிறுத்தவேண்டும். அனைத்து நகரங் களிலும் இலகுரக வாகனங்கள் நிறுத்தும் நிலையங்கள் உருவாக்க இடம் ஒதுக்க வேண்டும். காவல்துறையின் அத்துமீறலை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டண உயர்வைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வகைக்குள் கொண்டு வர வேண்டும். புதுச்சேரியில் சிறிய இலகு ரக வாகனம் காலியாகச் சொல்லும் போதும் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. தமி ழகத்தில் நுழையும் வாகனங்களுக்கு காவல்துறையின் கெடுபிடி அதி கரித்துள்ளதோடு, கடுமையான அபராதமும் விதிக்கப்படுவதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இம்மாநாட்டில், புதுச்சேரி உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற னர்.