சென்னை, பிப். 17 - நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, “மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை, பங்குத் தொகை களை முறையாக வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “மாநிலத்திற்கான நிதி கோரி அழுத்தம் தரப்படுகிறது. முதல மைச்சர் பிரதமரை சந்திக்கும் போதெல்லாம் நிதியை விடு விக்க கோரி மனு அளிக்கிறார். தொடர்ந்து வலியுறுத்தப்ப டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜயதாரணி, “அரசுப் பள்ளி மாண வர்கள் இடைநிற்றல் விகிதம் 8.24 விழுக்காட்டிலிருந்து 16.7 விழுக்காடாக உயர்ந்துவிட் டது என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். மாநில அரசு மறுக்கிறது. இதில் எதை ஏற்றுக்கொள்வது?” என்றார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “தில்லி, அசாம், உத்தரப்பிரதேசம், தமிழ கம் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று 100 விழுக்காடு இடைநிற்றல் இருப்பதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கி றார். விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினோம். பதில்வரவில்லை. மாநில அரசு தரும் விவரம்தான் சரியானது” என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய விஜயதாரணி, “ராஜீவ் காந்தி படுகொலையின்போது 16 காவலர்கள் இறந்தனர். 37 பேர் காயமுற்றனர். இந்தசம்பவத்தில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர். அதேநேரத்தில் இறந்த 16 காவலர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்” என்றார்.