இராமநாதபுரம், ஜூலை 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு கூட்டம் இ.கண்ணகி தலைமையில் நடை பெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.பால பாரதி கலந்துகொண்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர். செந்தில்வேல், மாவட்டக்குழு உறுப்பினர்.பி.வட கொரியா ஆகியோர் கட்சி நலனுக்கும், கட்சி கோட்பாட்டிற் கும் விரோதமான நடவடிக்கையில் செயல்பட்டு வந்தனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சி.ஆர். செந்தில்வேல், பி.வடகொரியா ஆகிய இருவரை யும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கு வது என்று மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. இத்தகவலை மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை தெரிவித்துள்ளார்.