ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன.
ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA) நான்காம் கட்ட கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, குளிர்காலத்திற்குப் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்புப் பணி இன்று தொடங்கியது. இப்பணிகள் இன்று முதல் 6 நாட்களுக்கு நடைபெற உள்ளன. 76 குழுக்களாக பிரிந்து, ஒரு குழுவிற்கு 4 பேர் வீதம், 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாளான இன்று மாமிச உண்ணிகள், கால் தடம், சாணம் ஆகியவற்றின் அடையாளங்கள் மூலம் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
