ஈரோடு, ஜூலை 3- 100 நாள் வேலையை தொடர்ந்து வழங்குவதுடன், சட்டக்கூலியை குறைக்காமல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. 100 நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். சட்ட கூலியான ரூ.229 குறைக்காமல் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்வதை தடுக்க வேண்டும். புதிய வேலை அட்டையும் அதற்கான வேலையையும் 30 தினங்களுக்குள் வழங்க வேண்டும். வேலை செய்த 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும். 100 நாள் வேலை கூலி பணத்தை வங்கி கடனுக்கு பிடித்தும் செய்வதை நிறுத்த வேண்டும். வேலம்பாளையம் ஊராட்சி டேனிஸ்புரம் பகுதியில் பல மாதங்களாக பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணற்று மோட்டாரை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் டி.தங்கவேல் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட தலைவர் ஆர்.விஜயரா கவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விவசாய சங்கத்தில் தாலுகா நிர்வாகி கே.கண்ணுச்சாமி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, ஏ.கே.சீனி வாசன், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர். இதேபோல், கொடுமுடி வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.பழநிசாமி, மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதில் ஒன்றிய செயலாளர் பி.கனகவேல், மாவட்டக்குழு உறுப்பினர் வி.மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.
பென்னாகரம்
இதேபோல், தருமபுரி மாவட் டம், பென்னாகரம் வட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்களுக்கான சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். புதிய அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பளத்தை 400 ரூபா யாக உயர்த்தி வழங்க வேண்டும். பென்னாகரம் பகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நில வும் குடிநீர் பிரச்சனையை உடன டியாக தீர்க்க வேண்டும் என வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலு வலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்க நிர்வாகிகள் தேவராஜ், எஸ்.பெரு மாள், செல்வராஜ், மணிவண்ணன் உள்ளிட்டோர் தலைமை வகித்த னர். மாநில பொதுச் செயலாளர் பி. அமிர்தலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம். ஆறுமுகம். முன்னாள் ஒன்றியத் தலைவர் வி.மாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சோ.அர்ஜுனன், மாவட்ட செய லாளர் எம்.முத்து, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.எம். முரு கேசன், எம். குமார், வி.ரவி, எம்.சிவா மற்றும் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.