தருமபுரி, ஜூன் 13- உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை ஒப் படைக்க வேண்டும் என காவல் துறையினர் எச் சரித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்பகுதியி லுள்ள வாச்சாத்தி, அரசநத்தம், கலசபாடி, சூரிய கடை, எஸ்.தாதம்பட்டி, மலைத்தாங்கி, பாலகுட்டை, நாய்குத்தி, வேலனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி களில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை சிலர் வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த நாட்டுத் துப்பாக்கிகளால் வன விலங்குகளை வேட்டையாடு தல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரி யவந்தது. இதையடுத்து, சித்தேரி மலைத் தொடரில் உள்ள கிராமங்களில் அரூர் காவல் ஆய்வாளர் டி.கண்ணன் தண்டோரா மூலம் பொதுமக்கள் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்தால் எவ்வித வழக்குகளும் கிடையாது. அதே நேரத்தில் காவல்துறையினர் சோதனை செய்து பிடிப்பட்டால், கைது நடவடிக்கை இருக்கும் என எச்சரித்தனர். இதேபோல், கோட்டப்பட்டி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர் பி.ரவி, உரி மம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.