tamilnadu

img

சேறும், சகதியுமாக உள்ள சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை

பென்னாகரம், ஆக.10- பென்னாகரம் பேரூ ராட்சி பகுதியில் உள்ள  சாலை சேறும், சகதியு மாக இருப்பதை செப்பனிட  வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட் சிக்கு உட்பட்ட 7ஆவது வார்டு பகுதியான எம்.கே. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் தார்ச்சாலை பழுதடைந்து பல ஆண்டுகள்  ஆகியும் இதுவரை சாலை செப்பனிடப்பட வில்லை. மேலும் அந்த சாலை வழியாகத் தான் மாணவர்களின் தங்கும் விடுதிக்கு செல்ல வேண்டும். இதனால் அப்பகுதியில்  மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந் தனர். இந்நிலையில் சமீப காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த  சாலை சேரும், சகதியுமாக காணப்படு கிறது. இதனால் போக்குவரத்து பெரிதும்  பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இச்சாலை யை உடனடியாக செப்பனிட வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.