திருப்பூர், பிப். 16 – திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் இருந்து வெங்கமேடு பகுதிக்குச் செல் லும் சாலையைச் செப்பனிட வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு குடிநீர்த் திட்டக்குழாய் பதிப்பதற்காக வெங்கமேடு – ஆத்துப்பாளையம் சாலையில் குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தை சரிவர மூடா மலும், சாலையைச் செப்பனிடாமலும் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக இருக்கும் இந்த சாலையில் பயணம் செய்வோர் கடுமையாக அவதிப்படுகின்றனர். குறிப்பாக இந்த சாலையின் வழியாகத்தான் வெங்க மேடு வி.கே.அரசு மேல்நிலைப் பள் ளிக்கு 250க்கும் மேற்பட்ட மாணவர் கள் போய் வருகின்றனர். 10 நிமிடத் தில் கடந்து செல்ல வேண்டிய பயண நேரம், சாலையின் மோசமான நிலை காரணமாக அரை மணி நேரப் பயண மாக உள்ளது. அத்துடன் மாலை, இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக பய ணிப்பது விபத்து ஏற்படுத்தக் கூடிய தாகவும் உள்ளது. எனவே மாநக ராட்சி அதிகாரிகள் உடனடியாக அந்த சாலையைப் பார்வையிட்டு, துரிதமாக செப்பனிட்டுத் தரும்படி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். வெள்ளியன்று முதலாவது மண் டல அலுவலகத்தில் வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சதீஷ்குமார், ஒன் றியச் செயலாளர் எஸ்.அருள், ஆத்துப் பாளையம் கிளைத் தலைவர் வெ.பாலாஜி, ஒன்றியக்குழு உறுப்பி னர் அ.சந்தோஷ்குமார், பாரதி, பன் னீர் உள்ளிட்டோர் மனுவை அளித் தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வெங்கமேடு ஆத்துப் பாளையம் சாலை விரைந்து செப்பனி டப்படும் என்று உறுதியளித்ததாகவும் வாலிபர் சங்க நிர்வாகிகள் தெரிவித் தனர்.