tamilnadu

நான்கு வழிச்சாலையில் ரவுண்டான அமைக்க ஆட்சியரிடம் மனு

தருமபுரி, மார்ச் 9-  சிந்தல்பாடி ரயில்வே மேம்பாலம் நான்கு வழிச்சா லையில் ரவுண்டானா அமைத்து விபத்துகள் நடப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தெங்கனூர் அருகே சிந்தல்பாடி ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தை அடுத்து நான்கு வழிச் சாலை உள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தரும புரி - அரூர் சாலையும், பாப்பிரெட்பட்டி -மொரப்பூர் சாலையும் குறுக்கிடுவதால் நான்கு சாலைகள் சந்திக்கும் மையமாக உள்ளது.  இச்சாலையில்  அரசு, தனியார் பேருந்துகள் மட்டு மல்லாமல் பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. குறுகிய சாலை என்ப தால் விபத்துகள் நடக்கும் இடமாக உள்ளது. எனவே, விபத்துகளை தடுக்கவும், வாகன ஓட்டிகள், பயணிக ளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இந்த சாலை களை அகலப்படுத்த வேண்டும். மேலும், நான்கு சாலைகள் சந்திப்பில் ரவுன்டானா அமைத்து சாலை யின் மேற்பரப்பில் தடுப்பு சுவர் அமைக்க வேண் டும். அத்துடன் உயர் மின்கோபுர விளக்கு, பயணி கள் நிழற்கூடம், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.