tamilnadu

img

பால் கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகம் சாலையில் பாலைக்கொட்டி விவசாயிகள் போராட்டம்

தருமபுரி, செப்.23 பால் உற்பத்தியாளர்களிடமி ருந்து கொள்முதல் செய்ய மறுக்கும் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் தருமபுரி நான்கு வழிச் சாலையில் பாலைக் கொட்டி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், மொரப் பூரை அடுத்துள்ள சின்னா கவுண் டம்பட்டி மற்றும் பொம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு ஒன்றாக ஆவின் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள னர்.

இவர்களிடமிருந்து ஆவின் கூட்டுறவு சங்கம் பாலை மொத்த மாக வாங்கி பொதுமக்களுக்கு விற் பனை செய்வது வழக்கம். இந்நிலை யில், கடந்த ஒரு வார காலமாக ஆவின் நிர்வாகம் விவசாயிகளிட மிருந்து பாலை கொள்முதல் செய் வதை நிறுத்தி வைத்துள்ளது.  இதனைக் கண்டித்து அப்பகுதி யைச் சேர்ந்த பால் விவசாயிகள் நூற் றுக்கும் மேற்பட்டோர் தருமபுரி நான்கு வழிச்சாலையில் கொள் முதல் செய்யப்படாததால் வீணான 500 லிட்டருக்கும் மேற்பட்ட பாலை சாலையில் கொட்டினர்.

மேலும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைமை அலுவலகத்தை முற்றுகை யிட்டதுடன், நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு ஆவேச முழக்கங் களை எழுப்பினர். இதனால் அப்ப குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்து தகவலறிந்த தரும புரி டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர் களை கலைந்து செல்லுமாறு வலியு றுத்தினர். ஆனால், அவர்கள் யாரும் கலைந்து செல்ல மறுத்து போராட் டத்தை தொடர்ந்தனர்.

இதைய டுத்து விவசாயிகளிடம் ஆவின் அலு வலக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி  பால் கொள்முதல் செய்வதாக வாக்குறுதியளித்தால் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.