tamilnadu

img

கோவையில் பெண்களை புகைப்படம் எடுத்த காவலர் சஸ்பண்ட்!

கோவை,அக்டோபர்.22-  சாய்பாபா காலனியில் பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த போக்குவரத்து தலைமைக் காவலர்  பாலமுருகன் பணியிடை நீக்கம்.
கோவை சாய்பாபா காலனி காவல் நிலைய போக்குவரத்து தலைமைக் காவலர் காவலர் பாலமுருகன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  பேக்கரியில்  டீ குடிக்கச் சென்றுள்ளார். பேக்கரியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சிலரைப் பாலமுருகன் தனது செல்போனில்  படம் பிடித்துள்ளார்.
அதனைக் கண்ட பெண்கள் கூச்சலிடவே அங்கிருந்து தப்ப முயன்ற பாலமுருகனைத் துரத்திப் பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் பெண்களைப் புகைப்படம் எடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், 
விரிவாக விசாரிக்கத் துணை ஆணையருக்கு அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட துணை ஆணையர் ஸ்டாலின் , போக்குவரத்து தலைமைக் காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.